தமிழகத்திக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கை பண்டார | தினகரன் வாரமஞ்சரி

தமிழகத்திக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கை பண்டார

இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக தமிழகத்துக்குள் நுழைந்துள்ளார் என்ற சந்தேகத்தில் மன்னாரைச் சேர்ந்த நபரொருவரை தமிழக கடலோர காவற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

படகு மூலம் தமிழகத்துக்குள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக ராமேஸ்வரம் கரையோர பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தனுஸ்கோடி கடற்கரையில் பொலிசார் நேற்றுமுன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.  

இதன்போது கம்பி பாடு கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்தனர். விசாரணை செய்தனர். கைதுசெய்யப்பட்ட இந்நபர் சிங்களம் பேசுவதால் இவர் தொடர்பில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

மன்னார் குறூப் நிருபர்  

Comments