பூரண அரச மரியாதையுடன் தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று | தினகரன் வாரமஞ்சரி

பூரண அரச மரியாதையுடன் தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று

ராம்மாஞ்ஞ மஹா நிக்காயவின் மறைந்த மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய நாபான பேமசிறி தேரரின் இறுதியைக் கிரியைகள் இன்று பகல் 1.00 மணிக்கு பூரண அரச மரியாதையுடன் கண்டி, குண்டசாலை - வராபிட்டியவிலுள்ள பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இடம்பெறும்.

ராம்மாஞ்ஞ மஹா நிக்காயவின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய நாபானே பிரேமசிறி தேரர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 98 வயதில் காலமானார். வணக்கத்திற்குரிய நாபானே பிரேமசிறி தேரர் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி ராம்மாஞ்ஞ மஹா நிக்காயவின் மகாநாயக்கராக தெரிவு செய்யப்பட்டார்.
 

Comments