மேற்கிந்திய தீவு வீரர் லீவிஸ் விலகல் | தினகரன் வாரமஞ்சரி

மேற்கிந்திய தீவு வீரர் லீவிஸ் விலகல்

இ ந்திய - மேற்கிந்திய தீவு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று கவுகாத்தியில் நடக்கிறது. இப்போட்டியில் இடம் பெற்றிருந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ் விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு வந்துள்ள மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-, மேற்கிந்திய தீவு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று கவுகாத்தியில் நடக்கிறது.

 

இந்த போட்டிக்கான மேற்கிந்திய தீவு அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ், தனிப்பட்ட காரணத்துக்காக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, சுனில் நரின் ஆகியோர் இல்லாத நிலையில் லீவிஸ் விலகல், மேற்கிந்திய தீவுக்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவருக்கு பதிலாக ஒரு நாள் போட்டி அணிக்கு கீரன் பவெலும், 20 ஓவர் போட்டி அணிக்கு நிகோலஸ் பூரானும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Comments